Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 30 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

30 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

30 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

30 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ADDED : ஜூன் 05, 2025 01:03 AM


Google News
ஓசூர், ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது.

சூளகிரி, பா.ஜ., மத்திய ஒன்றிய முன்னாள் தலைவர் லட்சுமிபதி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் ராஜீ, துணைத்தலைவர் திருப்பதி, பொருளாதார பிரிவு சூளகிரி ஒன்றிய செயலாளர் ரகு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நரேஷ் உட்பட, 20க்கும் மேற்பட்டோர், பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சியின் சால்வை அணிவித்து எம்.எல்.ஏ., பிரகாஷ் வரவேற்றார்.

அதேபோல், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி தெற்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், பேரிகையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், பா.ஜ., முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சந்தோஷ்பாபு தலைமையில், 10க்கும் மேற்பட்டோர், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் முன்னிலையில் தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.

இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்கியராஜ், கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us