Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.7.38 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது; ஒருவருக்கு வலை

ரூ.7.38 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது; ஒருவருக்கு வலை

ரூ.7.38 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது; ஒருவருக்கு வலை

ரூ.7.38 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது; ஒருவருக்கு வலை

ADDED : டிச 01, 2025 02:26 AM


Google News
ஓசூர்:ஓசூரில், போலீசாரின் வாகன சோதனையில் மொத்தம், 7.38 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே, சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., பாலமுருகன் மற்றும் போலீசாார், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்-தனர். அப்போது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து தமி-ழகம் நோக்கி வந்த டாடா இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தபோது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு, புகையிலை பொருட்கள் மற்றும் கர்நாடகா மதுபானத்தை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், கார் டிரைவரான, கர்நாடகா மாநிலம், பெங்களூரு தேவசந்திரா பகுதியை சேர்ந்த மணிகண்டா, 39, மாற்று டிரைவர் சந்துரு, 26, ஆகியோரை கைது செய்தனர். அவர்-களிடமிருந்து, 1.13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 133 கிலோ புகையிலை பொருட்கள், 1,635 ரூபாய் மதிப்புள்ள, 21 பாக்கெட் கர்நாடகா மதுபானம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.* கர்நாடகா மாநில வணிக வரித்துறையினர், நேற்று முன்-தினம் இரவு கோரமங்கலா பகுதியிலிருந்து சந்தேகத்தின் பேரில் சரக்கு வாகனம் ஒன்றை விரட்டி வந்தனர். ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, ரகசிய அறை அமைத்து, புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் கடத்தியது தெரிந்தது. அதனால், சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், வாகனத்தில் இருந்த மொத்தம், 5.13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 569 கிலோ புகை-யிலை பொருட்கள், 1,620 ரூபாய் மதிப்புள்ள, 19 பாக்கெட் மது-பானம் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய வாகன டிரைவரை தேடி வருகின்றனர்.

* ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் போலீசார், ஜூஜூவாடி சோத-னைச்சாவடியில் நேற்று காலை அவ்வழியாக வந்த ஈகோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 1.12 லட்சம் ரூபாய் மதிப்-புள்ள, 125 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 1,650 ரூபாய் மதிப்புள்ள கர்நாடகா மதுபானங்களை, காஞ்சிபுரத்திற்கு கடத்தியது தெரிந்தது. காரை ஓட்டிச்சென்ற, காஞ்சிபுரம் படப்பை பகுதியை சேர்ந்த ஜெயபிரசாந்த், 32, என்பவரை போலீசார் கைது செய்து, காருடன், மது, புகையிலை பொருட்களை பறி-முதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us