Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வெவ்வேறு இடங்களில் 2 பெண் மாயம்

வெவ்வேறு இடங்களில் 2 பெண் மாயம்

வெவ்வேறு இடங்களில் 2 பெண் மாயம்

வெவ்வேறு இடங்களில் 2 பெண் மாயம்

ADDED : மே 12, 2025 02:36 AM


Google News
கிருஷ்ணகிரி: மகாராஜகடை அடுத்த போதிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் சவுந்-தர்யா, 24. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் விக்னேஷ் என்பவ-ருடன் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரண-மாக, கடந்த ஓராண்டாக அவரை பிரிந்து தன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த, 7 இரவில் வீட்டிலிருந்து வெளியில் சென்-றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் மகாராஜகடை போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதில் போத்திநாயனப்பள்-ளியை சேர்ந்த கட்டட தொழிலாளி மாதையன், 28, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர். கல்லாவி அடுத்த ஏ.ரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் மீனா, 29. கடந்த ஏப்., 29ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அளித்த புகார்-படி, கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us