Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அணையில் தற்கொலை முயற்சி 2 ‍பேர் பலி; இருவர் மீட்பு

அணையில் தற்கொலை முயற்சி 2 ‍பேர் பலி; இருவர் மீட்பு

அணையில் தற்கொலை முயற்சி 2 ‍பேர் பலி; இருவர் மீட்பு

அணையில் தற்கொலை முயற்சி 2 ‍பேர் பலி; இருவர் மீட்பு

ADDED : செப் 11, 2025 03:50 AM


Google News
Latest Tamil News
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையில் குதித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயன்றதில், இருவர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், குப்பம், ஜே.டி., சாலையை சேர்ந்தவர் லட்சுமண மூர்த்தி, 50. இவரது மனைவி ஜோதி, 40. இவர்களது மகள் கிருத்திகா, 20. ஜோதியின் தாய் சாரதாம்மாள், 75. இவர்கள் நேற்று கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு சுற்றுலாவுக்கு செல்வது போல வந்தனர்.

காலை, 10:00 மணிக்கு, அணையின் தண்ணீர் வெளியேறும் சிறிய மதகின் முன்புறம் ஒவ்வொருவராக குதித்தனர்.

அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், கிருத்திகா, ஜோதியை மீட்டனர். சாரதாம்மாள், லட்சுமண மூர்த்தியை மீட்க முடியவில்லை; சிறிது நேரத்தில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

விசாரணையில், கிருத்திகாவுக்கு, அவரது தாய்மாமனுடன் கடந்த வாரம் திருமண நிச்சயம் ஆகியுள்ளது. ஆனால், அந்த திருமணத்தில் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை. இதில், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து, அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்து தற்கொலை செய்து கொள்ள குதித்தனர். இதில், இருவர் இறந்தனர்.

இது குறித்து, கே.ஆர்.பி., அணை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us