ADDED : ஜூன் 30, 2024 01:18 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள துணை தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் அலுவலர்கள் ஜெகதேவிபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் திருவண்ணாமலை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு லாரியை சோதனையிட்டதில், கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. அதிகாரிகள் புகார் படி, பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.