Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு

ADDED : ஜூலை 18, 2024 01:26 AM


Google News
ஓசூர்: ஓசூர் தின்னுார் வாசவி நகரை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன், 40, டிரைவர்; இவரது மகன் அரசு, 20. கூலித்தொழிலாளி; கடந்த, 14 மதியம், 3:30 மணிக்கு, அப்பகுதியை சேர்ந்த தன் நண்பரான சுல்தான், 21, என்பவரை அழைத்து கொண்டு, பைக்கை அதிவே-கமாகவும், அலட்சியமாகவும் ஓட்டிச் சென்றார். இதை பார்த்த லிங்கேஸ்வரன், மகனை தட்டிக்கேட்டார். அவர்களுக்குள் வார்த்தை தகராறு ஏற்பட்ட நிலையில், அரசு தன் நண்பர் சுல்தா-னுடன் சேர்ந்து, தந்தை லிங்கேஸ்வரனை வீட்டின் முன் வைத்து கத்தியால் வெட்டினார்.

இதில் தலையில் படுகாயமடைந்த லிங்கேஸ்வரன், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அவ-ரது மகன் அரசு மற்றும் சுல்தான் ஆகிய இருவரை, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர். சுல்தான் மீது, ஓசூர் டவுன் ஸ்டேஷனில் கடந்தாண்டு நடந்த ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிட்டத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us