Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

ADDED : ஜூன் 08, 2024 03:02 AM


Google News
கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த சிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 19.

வேலூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம்., படித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்தவர் கவுதம், 19; பி.இ., முதலாமாண்டு மாணவர். நண்பர்களான இவர்கள், ஒரு வேலையாக கடந்த, 5ல், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் கிருஷ்ணகிரி வந்து வீடு திரும்பியுள்ளனர். பைக்கை சந்தோஷ்குமார் ஓட்டியுள்ளார். மதியம், 3:00 மணியளவில், தண்டேக்குப்பம் அருகில் கிருஷ்ணகிரி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் இறந்தார். படுகாயங்களுடன் கவுதம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us