Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 3 பெண்கள் உட்பட 4 பேர் மாயம்

3 பெண்கள் உட்பட 4 பேர் மாயம்

3 பெண்கள் உட்பட 4 பேர் மாயம்

3 பெண்கள் உட்பட 4 பேர் மாயம்

ADDED : ஜூலை 18, 2024 01:28 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த மாரச்சந்திரத்தை சேர்ந்தவர் மதுமிதா, 21; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்-துள்ளார். கடந்த, 8ல் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மதுமிதாவின் பெற்றோர் நேற்று முன்தினம் குருபரப்பள்ளி போலீசில் புகாரளித்-தனர். அதில், மாரச்சந்திரத்தை சேர்ந்த முகம்மது, 20 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

* மகாராஜகடை அடுத்த பெத்தமேலுப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 24; நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் அசோக்குமார் புகார் படி மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்-றனர்.

* சூளகிரி அருகே காமன்தொட்டியை சேர்ந்தவர் ராகவேந்திரா, 40, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மனைவி கலாவதி, 35; இவர்களது, 5 வயது மகன், சூளகிரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கிறார். கடந்த, 3 மாலை, 4:00 மணிக்கு மகனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற கலாவதி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் ராகவேந்திரா கொடுத்த புகார் படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us