Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது

தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது

தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது

தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது

ADDED : ஜூன் 01, 2024 02:03 AM


Google News
ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த கோணம்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி ராதா, 45, விவசாயி; இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த லட்சுமணன், 47, மற்றும் நஞ்சுண்டன், 47, தரப்பினருக்கும் இடையே நில எல்லை தகராறு தொடர்பாக முன்

விரோதம் இருந்தது.

இந்நிலையில், ராதா அப்பகுதியில் உள்ள நிலத்தில் முள்வேலி அமைத்தார். இதற்கு லட்சுமணன், நஞ்சுண்டன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த, 29 மதியம், 1:30 மணிக்கு இரு தரப்பினர் மத்தியில் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது லட்சுமணன், நஞ்சுண்டன், இவரது மகன் மாதேஷ், 22, ஆகியோர் சேர்ந்து ராதாவை தாக்கினர். அதை விசாரிக்க வந்த அவரது மகன் அசோக், 25, என்பவரை தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த தாய், மகன் இருவரும், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ராதா கொடுத்த புகார்படி, ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, லட்சுமணன், நஞ்சுண்டன், மாதேஷ் ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us