Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆவின் முகவர்களுக்கு250 டிஜிட்டல் போர்டுகள்

ஆவின் முகவர்களுக்கு250 டிஜிட்டல் போர்டுகள்

ஆவின் முகவர்களுக்கு250 டிஜிட்டல் போர்டுகள்

ஆவின் முகவர்களுக்கு250 டிஜிட்டல் போர்டுகள்

ADDED : மார் 26, 2025 01:40 AM


Google News
ஆவின் முகவர்களுக்கு250 டிஜிட்டல் போர்டுகள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 250 ஆவின் முகவர்களுக்கு ஆவின் டிஜிட்டல் போர்டு வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் மற்றும் தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம் இணைந்து, ஆவின் பால் மற்றும் பால்பொருட்கள் விற்பனை குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது.

பால் வளத்துறை துணை பதிவாளர் விஷ்வேஸ்வரன் தலைமை வகித்தார். ஆவின் பொதுமேலாளர் சுந்தர வடிவேல் முன்னிலை வகித்தார். இதில், ஆவின்பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது குறித்து முகவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த, 250 ஏஜன்டுகளுக்கு, ஆவின் டிஜிட்டல் போர்டு வழங்கப்பட்டது. மேலும், பால் கசிவு, தயிர் கெட்டு போதல், நேரத்திற்கு பொருட்கள் வருவதில் தாமதம் குறித்த ஏஜன்டுகளின் குறைகள் சரிசெய்யப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரன், பால் பதப்படுத்தும் பிரிவு மேலாளர் சுஜா, தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் கவிப்பிரியா, மாநில நுகர்வோர் சங்க மாநில பொதுச்

செயலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us