Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை

ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை

ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை

ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை

ADDED : ஜூலை 07, 2024 05:57 AM


Google News
ஓசூர் : ஓசூரில், ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 14.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-பாகலுார் சாலையில், ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுத்துள்ளார். அதன் பின் எந்தவிதமான பண பரிவர்த்த-னையும் ஏ.டி.எம்., மையத்தில் நடக்கவில்லை. மணிக்கணக்கில் பரிவர்த்தனை நடக்காததால், வங்கி டெக்னீசியன் பிரிவுக்கு சந்-தேகம் வந்தது. இதனால் நேற்றிரவு, 7:00 மணிக்கு மேல், ஏ.டி.எம்., மையத்திற்கு ஊழியர்கள் சென்று பார்த்தனர். அங்கு மையத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. திறந்து பார்த்த போது, காஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம்., இயந்திரம் உடைக்கப்பட்டு, அதற்குள் இருந்த, 14.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டி-ருப்பது தெரிந்தது. ஊழியர்கள் கொடுத்த தகவல்படி, ஹட்கோ போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர்.

ஏ.டி.எம்., மையத்தில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேம-ராவில், மர்ம நபர்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்-ளையில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் அதி-காலை, 2:00 மணிக்கு தற்போது கொள்ளையடிக்கப்பட்ட ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் இருந்து, சற்று தொலைவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்.,ல் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். காவலாளி எழுந்து வந்-ததால் மர்ம கும்பல் தப்பி சென்றது.ஆனால், ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் காவலாளி இல்லாததால், கொள்ளை சம்பவத்தை எளிதாக மர்ம கும்பல் அரங்கேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us