Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

ADDED : ஜூன் 30, 2024 01:17 AM


Google News
கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டம், மாட்டுகாரன்புதுாரை சேர்ந்தவர் சீனிவாசன், 40; இவர் மனைவி விஜயசாந்தி, 30; திருமணமாகி, 7 ஆண்டுகளாகியும் இவர்களுக்கு குழந்தையில்லை.

அதனால் தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரிடம் கோபித்து கொண்டு காவேரிப்பட்டணம் உறவினர் வீட்டிற்கு வந்த விஜயசாந்தி கடந்த, 27ல் மாயமானார். இது குறித்து சீனிவாசன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். அதில், சேலம் மாவட்டம், கள்ளிக்காட்டை சேர்ந்த செல்வகுமார், 40 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us