Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வீடு, அடிப்படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

வீடு, அடிப்படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

வீடு, அடிப்படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

வீடு, அடிப்படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

ADDED : ஆக 06, 2024 01:30 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெரிகேனப்பள்ளி, சந்தைமேடு, யூ.குருபரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட இருளர், பழங்குடியின மக்கள் நேற்று கலெக்டர் அலுகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:

எங்களுக்கு கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. அங்கு நாங்கள் குடிசைகள் அமைத்து வசிக்கிறோம். மழை காலங்களிலும், வன விலங்குகள் அச்சுறுத்தலாலும், பல்வேறு சிரமங்களை சந்திக்கிறோம். எங்களுக்கு, மின் இணைப்பு வசதியும் செய்து தரப்படவில்லை. எனவே, எங்களுக்கு இலவச வீடு, மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us