Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு

தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு

தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு

தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு

ADDED : ஜூலை 03, 2024 07:54 AM


Google News
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 26 முதல் நேற்று வரை, மின்வாரியத்துறை சார்பில், தேசிய மின்சார பாதுகாப்பு வாரம், மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் கொண்-டாடப்பட்டது.

அதன்படி இறுதி நாளான நேற்று, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை

வகித்தார்.

தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறையின் கிருஷ்ணகிரி மற்றும் தர்-மபுரி மாவட்ட மின் ஆய்வாளர் பொறியாளர் செந்தில்குமார், மாணவியருக்கு, 'மழை காலங்களில் மின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி பேசு-கையில், ''மின் கம்பிகளின் அருகில் பட்டங்களை பறக்க விடக்

கூடாது. பவர் பிளக்கினுள் கைவிரல், குச்சி, கம்பி போன்ற-வற்றை நுழைக்கக்கூடாது. எந்த திரவத்தையும் பயன்படுத்தி சுவிட்சுகளை சுத்தம் செய்யக்கூடாது. ஈரமான நிலையில், மின் சாதனங்களை இயக்க வேண்டாம்''

என்றார்.

நிகழ்ச்சியில், மின் ஆய்வாளர் அலுவலக கண்காணிப்பாளர் சத்தி-யசீலன், உதவியாளர் யாசின்

முகம்மது, ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நயாஷ் உல்லா, செல்வக்குமார் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us