Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய பாட புத்தகங்கள் வழங்கல்

அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய பாட புத்தகங்கள் வழங்கல்

அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய பாட புத்தகங்கள் வழங்கல்

அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய பாட புத்தகங்கள் வழங்கல்

ADDED : ஜூலை 06, 2024 06:44 AM


Google News
காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபு-ரத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள, அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் குழந்தைகளுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பாடத்திட்டத்தில், புதிய பாட புத்தகங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

அர்ச்சனா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் அர்ச்சனா ஜெயபால் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஸ்ரீ கலா வர-வேற்றார். விழாவில் உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் வெங்கட்ராமன், ஸ்ரீ பிரணவா சிட்டி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் கார்த்தி சந்திர-மௌலி, சென்னை மலர் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக தேசிய பாடத்-திட்ட புத்தகங்களை வழங்கினர்.

விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். நிர்வாக முதல்வர் முஸமில் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us