ADDED : ஜூன் 13, 2025 01:42 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, மாயனுார் இரட்டை வாய்க்கால் புது பாலம் அருகே, நேற்று அதிகாலை மாயனுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாட்டு வண்டியில் அரை யூனிட் காவிரி ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தொழிலாளி ஆறுமுகம், 65, என்பவரது மீது, வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.