/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கழிவறை பயன்பாட்டுக்கு வருமா :பொது மக்கள் எதிர்பார்ப்பு கழிவறை பயன்பாட்டுக்கு வருமா :பொது மக்கள் எதிர்பார்ப்பு
கழிவறை பயன்பாட்டுக்கு வருமா :பொது மக்கள் எதிர்பார்ப்பு
கழிவறை பயன்பாட்டுக்கு வருமா :பொது மக்கள் எதிர்பார்ப்பு
கழிவறை பயன்பாட்டுக்கு வருமா :பொது மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 02, 2025 12:55 AM
கரூர்:கரூர் அருகே, புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடம் எப்போது, பயன்பாட்டுக்கு வரும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் சாலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதம் அடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது.
தற்போது, துாய்மை பாரத இயக்கம் சார்பில், ஏழு லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், பூட்டி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், ஆண்டாங்கோவில் பகுதியில், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பி டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.