Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

ADDED : மே 19, 2025 01:45 AM


Google News
கரூர்: கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செட்டிப்பாளையம் பிரிவு உள்ளது. கரூர் நகர பகுதியில் இருந்து, கருப்பம்பாளையம் சுக்காலியூர், செட்டிப்பாளையம், அப்பிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல, மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும்.

அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்-வதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொது-மக்கள், கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் விபத்தும் நடக்கிறது.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது, செட்டிப்பாளையம் பிரிவில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்ப-டவில்லை. தற்போது, வாகன பெருக்கம் அதிகரித்துவிட்டதால், செட்டிப்பாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதி-களில் இருந்து செல்லும் பொதுமக்கள், மதுரை தேசிய நெடுஞ்சா-லையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்

படுகின்றனர். இதனால், விபத்துகளை தடுக்க செட்டிப்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us