Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

ADDED : ஜூன் 02, 2025 03:51 AM


Google News
அரவக்குறிச்சி: தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அணைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும், க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரூரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையையொட்டி கிராம பஞ்சாயத்துகள் உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சாலை விபத்து, தீ விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை.கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆவதால் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகஅளவில் ஏற்படுகிறது. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us