ADDED : மே 10, 2025 01:00 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவன் புகார் செய்தார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் வெள்ளியணை ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணன், 28. இவரது மனைவி கனிஷ்கா,
21. இவர் கடந்த, 7ல் வேலாயுதம்பாளையம் அருகே, மோதுகாட்டில் உள்ள, உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், இதுவரை கனிஷ்கா வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் சரவணன், போலீசில் புகார் செய்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.