Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வளர்பிறை சஷ்டி பூஜை

வளர்பிறை சஷ்டி பூஜை

வளர்பிறை சஷ்டி பூஜை

வளர்பிறை சஷ்டி பூஜை

ADDED : ஜூன் 02, 2025 04:06 AM


Google News
கரூர்: புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை, நேற்று மாலை நடந்தது.

பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு, வைகாசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. அதைதொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலும், வைகாசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.A





      Our Apps Available On




      Dinamalar

      Follow us