Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மயங்கி விழுந்த வாட்ச்மேன் பலி

மயங்கி விழுந்த வாட்ச்மேன் பலி

மயங்கி விழுந்த வாட்ச்மேன் பலி

மயங்கி விழுந்த வாட்ச்மேன் பலி

ADDED : செப் 04, 2025 01:25 AM


Google News
குளித்தலை, குளித்தலை அடுத்த, தொண்டமாங்கினம் பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கன், 57. இவர், சடையம்பட்டியில் அமைந்துள்ள தனியார் சோலார் பவர் பிளான்ட் பேனல் நிறுவனத்தில், வாட்ச்மேனாக கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். இதுகுறித்து அவரது உறவினர் கருப்பன், சங்கன் மகன் கதிர்வேலுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது சங்கன் இறந்து கிடந்தார்.இதுகுறித்து கதிர்வேலு கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us