/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கதவணையில் விரால் ரூ.650க்கு விற்பனை மாயனுார் கதவணையில் விரால் ரூ.650க்கு விற்பனை
மாயனுார் கதவணையில் விரால் ரூ.650க்கு விற்பனை
மாயனுார் கதவணையில் விரால் ரூ.650க்கு விற்பனை
மாயனுார் கதவணையில் விரால் ரூ.650க்கு விற்பனை
ADDED : செப் 15, 2025 01:31 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி நீரை, இந்த கதவணையில் தேக்கி வைக்கப்படுகிறது. டெல்டா பாசனத்திற்கு கதவணை ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கதவணையில் சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு வந்து கதவணை அருகே உள்ள கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால் மீன், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வரும், 17 முதல் புரட்டாசி தொடங்க உள்ளதால், பொதுமக்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர். இதனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கரூர், புலியூர், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, பஞ்சப்பட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மீன்களை வாங்கி சென்றனர்.