Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மோசமான சாலையால் கிராம மக்கள் பாதிப்பு

மோசமான சாலையால் கிராம மக்கள் பாதிப்பு

மோசமான சாலையால் கிராம மக்கள் பாதிப்பு

மோசமான சாலையால் கிராம மக்கள் பாதிப்பு

ADDED : ஜூன் 12, 2025 01:24 AM


Google News
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியில் இருந்து, வாய்க்கால் வரை சாலை உள்ளது. இதன் வழியாக மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த தார்ச்சாலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியமாக மாறி விட்டதால், விவசாயிகள் வாகனங்களில் செல்லும் போது சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் கிராம சாலையை புதுப்பிக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us