சாலையில் மழைநீர் தேங்கியதால் அவதி
சாலையில் மழைநீர் தேங்கியதால் அவதி
சாலையில் மழைநீர் தேங்கியதால் அவதி
ADDED : அக் 24, 2025 01:14 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரத்தில், மழைநீர் சாலையில் தேங்கி வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டு எண்,10ல், மண் சாலையாக இருப்பதுடன், மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் சாலையில் தேங்குகிறது. இதனால் நடந்து செல்லும் போது மக்கள் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., செயல் அலுவலர் கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட சாலையில் மழைநீர் தேங்கிய இடத்தை, தற்காலிகமாக மண் கொட்டி நிரவ நடவடிக்கை எடுக்கப்
படும் என, மக்களிடம் கூறினார்.


