ADDED : செப் 11, 2025 01:26 AM
குளித்தலை :குளித்தலை பஸ் ஸ்டாண்டில் உள்ள காந்தி சிலை முன், மறைந்த தமிழ்நாடு வணிக சங்க பேரவையின், மாநில தலைவர் வெள்ளையனுக்கு, முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குளித்தலை அனைத்து வணிகர் சங்க பேரவை தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் சதக்கத்துல்லா, பொருளாளர் வினோத், வழிகாட்டு குழு தலைவர்கள் பாலசுப்பிரமணி, வெங்கடேஷ், கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.