/உள்ளூர் செய்திகள்/கரூர்/காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கைகாசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை
காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை
காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை
காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2024 01:49 AM
அரவக்குறிச்சி: சின்னதாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில், காசிபாளையம் உள்ளது. இதில் பல்வேறு கிராம மக்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கரூரில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில், காசிபாளையம் பஸ் ஸ்டாப் பகுதிக்கு வந்து பஸ்சில் ஏறிச்செல்ல
வேண்டும்.
ஆனால், இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை. மழை மற்றும் கொளுத்தும் வெயில் காலங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் வெட்ட வெளியில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, காசிபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.