Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விவசாயிகளுக்கு துாய பால் உற்பத்தி குறித்து பயிற்சி

விவசாயிகளுக்கு துாய பால் உற்பத்தி குறித்து பயிற்சி

விவசாயிகளுக்கு துாய பால் உற்பத்தி குறித்து பயிற்சி

விவசாயிகளுக்கு துாய பால் உற்பத்தி குறித்து பயிற்சி

ADDED : செப் 19, 2025 01:15 AM


Google News
கரூர் : கரூர் பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், துாய பால் உற்பத்தி முறைகள் என்ற தலைப்பில் இன்று (19ம் தேதி) ஒருநாள் இலவச பயிற்சி நடக்கிறது.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக இன்று காலை 10:30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்கு பெறலாம். மேலும் தகவல் பெற, 04324 294335 மற்றும் 7339057073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us