Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பயனற்ற நிலையில் கழிப்பிடம்; பொதுமக்கள் கடும் அவதி

பயனற்ற நிலையில் கழிப்பிடம்; பொதுமக்கள் கடும் அவதி

பயனற்ற நிலையில் கழிப்பிடம்; பொதுமக்கள் கடும் அவதி

பயனற்ற நிலையில் கழிப்பிடம்; பொதுமக்கள் கடும் அவதி

ADDED : மே 25, 2025 01:12 AM


Google News
கரூர் :கரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதமடைந்துள்ளது.

கரூர் மாநகராட்சி, நரிகட்டியூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கழிப்பிடம் சேதமடைந்தது. இதுவரை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நரிக்கட்டியூர் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விட, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us