ADDED : மே 12, 2025 03:26 AM
கரூர்: கரூர் அருகே, பொது கழிப்பிடம் பயனற்ற நிலையில், சேதமடைந்துள்ளது.
கரூர் மாவட்டம், கோம்புபாளையம் பஞ்சாயத்து, நொய்யல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, டி.என்.பி.எல்., காகித ஆலையின் சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், 4.90 லட்ச ரூபாய் மதிப்பில், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.
அதை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், அந்த கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. அதை, கோம்புபாளையம் பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நொய்யல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


