Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம்; கலெக்டர் அறிவிப்பு

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம்; கலெக்டர் அறிவிப்பு

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம்; கலெக்டர் அறிவிப்பு

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம்; கலெக்டர் அறிவிப்பு

ADDED : ஜூலை 05, 2024 12:56 AM


Google News
கரூர்: பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பிறப்பு பதிவு என்பது குழந்தை பிறந்த, 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற வேண்டும்.

பிறப்பு சான்-றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான பிறப்பு சான்றிதழாகும். பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுனர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா பெற, அயல்நாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் அவசியமான ஆவணம். ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொ-ழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்திடலாம்.இதில், 12 மாதங்களுக்கு பின், 15 ஆண்டுகளுக்குள், 200 ரூபாய் தாமத கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்-யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. தற்போது, 15 ஆண்டுகள் கடந்த குழந்தைக-ளுக்கு பிறப்பு சான்று பெற டிச., 31 வரை கால அவகாசம் நீட்டிக்-கப்பட்டுள்ளது. எனவே, குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட தாசில்தாரிடம் உரிய ஆதாரங்களுடன் பிறப்பு சான்று பெற விண்-ணப்பிக்கலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us