Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் குளித்தலையில் இருவேறு இடங்களில் திருட்டு

கரூர் குளித்தலையில் இருவேறு இடங்களில் திருட்டு

கரூர் குளித்தலையில் இருவேறு இடங்களில் திருட்டு

கரூர் குளித்தலையில் இருவேறு இடங்களில் திருட்டு

ADDED : செப் 06, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
கரூர்: கரூர் குளித்தலையில் இரண்டு வீடுகளில் திருட்டு சம்பவம் இன்று பட்டப்பகலில் நடந்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலையில் மணிகண்டன் நகரில் வசித்து வரும் செந்தில்குமார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று மாலை 4:30 மணி அளிவில் காரில் வந்த மூன்ற மர்ம நபர்கள் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பத்தாயிரம் பணத்தை திருடிச்சென்றனர்.

குளித்தலை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு திருட்டு சம்பவம் குளித்தலையில் முசிறி அரசு போக்குவரத்து பணிமனையில் மேலாளர் மணிவேல் 50, வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிசென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ள்ளனர்.

குளித்தலையில் நடைபெற்ற இவ்விறு திருட்டு சம்பவங்களும் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us