Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் எறிபத்த நாயனார் யானை துண்டித்த விழா

கரூரில் எறிபத்த நாயனார் யானை துண்டித்த விழா

கரூரில் எறிபத்த நாயனார் யானை துண்டித்த விழா

கரூரில் எறிபத்த நாயனார் யானை துண்டித்த விழா

ADDED : அக் 01, 2025 02:12 AM


Google News
கரூர்:கரூரில் நடந்த எறிபத்த நாயனார், யானை துண்டித்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கரூரில் பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பல விழாக்கள் நடக்கிறது. அதில், எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா, யானை துண்டித்த விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

மகா அஷ்டமி நாளான நேற்று காலை, 8:30 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், சிவனாடியார்கள் ஒன்று சேர்ந்து, யானை துண்டித்த விழாவை தத்ருபமாக செய்து காட்டினர்.

அதை தொடர்ந்து, சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. அதில், கடவுள் வேடமிட்ட பள்ளி மாணவ, மாணவியரின் கோலாட்டம் இடம் பெற்றது. முன்னதாக நேற்று காலை, 6:00 மணிக்கு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், அனைத்து மூலவர் சிலைகளுக்கு சிறப்பு அபி ேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. விழாவில், ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், 50க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us