Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாமல் அவதி

சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாமல் அவதி

சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாமல் அவதி

சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாமல் அவதி

ADDED : ஜூன் 02, 2025 04:03 AM


Google News
கரூர்: கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, சுக்காலியூரில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அதிகம் உள்ளன. மேலும், சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து அத்திப்பாளையம், செட்டிப்பாளையம், கருப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர். ஆனால், சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில், இரண்டு பக்கமும் உள்ள பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை.

கரூர் மாவட்டத்தில், வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் மழை வரும்போதும், வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளபோதும், பஸ்கள் வரும் வரை அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் புகும் அவல நிலை உள்ளது.எனவே, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை சுக்காலியூரில், இரண்டு பக்கமும் உள்ள, பஸ் ஸ்டாப்புகளில் பயணிகள் நிழற்கூடம் கட்ட, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us