Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புதிய தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி

புதிய தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி

புதிய தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி

புதிய தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி

ADDED : ஜூன் 28, 2025 04:20 AM


Google News
கரூர்: கரூர் அருகே நடந்த, தீயணைப்பு துறை புதிய வீரர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழக தீயணைப்பு துறைக்கு சமீபத்தில் புதிதாக, 650 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும், மண்டலம் வாரியாக ஆறு மையங்களில் கடந்த ஏப்., 2ல் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு அடிப்படை பயிற்சி முகாம் தொடங்கியது.

திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட, 98 புதிய தீயணைப்பு வீரர்களுக்கு, கரூர் அருகே வேட்டமங்கலத்தில் உள்ள, தனியார் கல்லுாரியில் பயிற்சி முகாம் நடந்தது. நேற்று முன்தினம் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

பிறகு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகளை, திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் குமார் வழங்கினார்.

நிறைவு விழாவில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், உதவி தீயணைப்பு அலுவலர்கள் கோமதி, கருணாகரன், திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us