Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆடிப்பாடி விளையாடு பாப்பா' அங்கன்வாடி மையத்தில் சிறப்பு திட்டம் கரூர், ஜூன் 3

ஆடிப்பாடி விளையாடு பாப்பா' அங்கன்வாடி மையத்தில் சிறப்பு திட்டம் கரூர், ஜூன் 3

ஆடிப்பாடி விளையாடு பாப்பா' அங்கன்வாடி மையத்தில் சிறப்பு திட்டம் கரூர், ஜூன் 3

ஆடிப்பாடி விளையாடு பாப்பா' அங்கன்வாடி மையத்தில் சிறப்பு திட்டம் கரூர், ஜூன் 3

ADDED : ஜூன் 03, 2025 01:09 AM


Google News
அங்கன்வாடி மையத்தில் 'ஆடிப்பாடி விளையாடு பாப்பா' என்ற சிறப்பு திட்டம் மூலம், கல்வி கற்றுதரப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில், 1,052 குழந்தைகள் (அங்கன்வாடி) மையங்களில், சத்துமாவு ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக்கல்வி போன்றவை வழங்கப் படுகிறது.

குறிப்பாக, 2 வயது முதல், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முறைசாரா முன்பருவக்கல்வி செய்கைப்பாடல், கதை, விளையாட்டு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை 'ஆடிப்பாடி விளையாடு பாப்பா' எனும் சிறப்பு பாடத்திட்டம், 12 மாதங்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளர்கள், தற்போது வீடுகள் தோறும் குழந்தைகளை சேர்க்கை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்களது, 2 முதல், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் தவறாது சேர்க்க வேண்டும். அங்கு, ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடந்து வருவதால் அச்சேவைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us