Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கடவூரில் சமூக நீதி விழிப்புணர்வு முகாம்

கடவூரில் சமூக நீதி விழிப்புணர்வு முகாம்

கடவூரில் சமூக நீதி விழிப்புணர்வு முகாம்

கடவூரில் சமூக நீதி விழிப்புணர்வு முகாம்

ADDED : ஜூன் 25, 2025 01:43 AM


Google News
கரூர், கரூர் மாவட்ட சமூக நீதி, மனித உரிமை காவல் துறை சார்பில், ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம், கடவூரில் நடந்தது. அதில், சமூக நீதியின் அவசியம், மனித உரிமையால் கிடைக்கும் பயன்கள் குறித்து, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., முத்துக்குமார் விளக்கம் அளித்து பேசினார்.

தொடர்ந்து, பட்டியல் இன மக்களுக்கு உள்ள கடனுதவி வசதிகள் குறித்து, மாவட்ட தொழில் மைய மேலாளர் பரமேஸ்வரன், கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து எழுத்தாளர் சிவராமன் ஆகியோர் பேசினர். முகாமில், புள்ளியியல் ஆய்வாளர் பிரேம்குமார், போலீஸ் எஸ்.ஐ., க்கள் பாண்டியன், சதாசிவம், போலீஸ் ஏட்டு ராஜேஸ்வரி உள்பட, 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us