ADDED : ஜூன் 02, 2025 03:46 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் நடு அக்ரஹாரத்தில், சீதா-ராமர் கல்யாண மஹோத்ஸவம் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம், நடு அக்ரஹாரத்தில், 37ம் ஆண்டு சீதா-ராமர் கல்யாண மஹோத்ஸவம் சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த, 29ல் தொடங்கி தினமும் சீதா-ராமர் உருவ படத்திற்கு சிறப்பு வழிபாடு, பூஜை, சங்கீத கீர்த்தனை, பஜனை நடந்தது. நேற்று காலை, சீதா-ராமர் கல்யாண மஹோத்ஸவம் சிறப்பு நிழ்ச்சியை முன்னிட்டு, உருவ படத்திற்கு மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, ராமாயணம் குறித்த நடன நிகழ்ச்சி, பக்தி கீர்த்தனைகள், வேத மந்திரம் ஆகிய சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு சீதா-ராமர் கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, திருச்சி தேசிய கல்லுாரி முன்னாள் முதல்வர் சுந்தர்ராமன் செய்திருந்தார்.