Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் அருகே சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர் அருகே சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர் அருகே சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர் அருகே சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

ADDED : ஜூன் 09, 2024 04:17 AM


Google News
கரூர்: கரூர் அருகே, பாதாள சாக்கடை மூடி உடைந்ததால், கழிவு நீர் நேற்று காலை சாலையில் ஆறாக ஓடியது. இதனால், மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.

கரூர் அருகே வெங்கமேடு குளத்துப்பாளை யம் ரயில்வே கேட் பகுதியில், குடியிருப்புகள், பள்ளிகள், நுாலகம் ஆகியவை உள்ளன. அப்பகுதியில், பாதாள சாக்கடை கால்வாயின் மேல் மூடி, பல மாதங்களாக உடைந்த நிலையில் இருந்தது.

அதை, சரி செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்தனர். ஆனால், கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை குளத்துப்பாளையம் ரயில்வே கேட் பகுதியில், பாதாள சாக்கடை கால்வாயின் மேல் பகுதி, மூடியில் இருந்து, கழிவு நீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடியது. துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டி களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதனால், கரூர் மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை கால்வாயின், மூடியை மாற்றி கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us