Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் எள் அறுவடை பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் எள் அறுவடை பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் எள் அறுவடை பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் எள் அறுவடை பணி தீவிரம்

ADDED : மே 14, 2025 01:55 AM


Google News
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், எள் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, மத்திப்பட்டி, கொம்பாடிப்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் எள் சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது முதிர்ந்த எள்ளை, விவசாய தொழிலாளர்கள் கொண்டு அறுவடை செய்யப்படுகிறது.

கருப்பு ரகம் எள் கிலோ, 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த தண்ணீரே போதுமானதால், இந்த சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us