Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தனியார் சர்க்கரை ஆலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

தனியார் சர்க்கரை ஆலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

தனியார் சர்க்கரை ஆலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

தனியார் சர்க்கரை ஆலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

ADDED : அக் 11, 2025 12:56 AM


Google News
கரூர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி முகாம், தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் நேற்று நடந்தது.

தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும், தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், பருவமழையின் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, கட்டடங்களில் தீ விபத்து ஏற்படும் போது தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து, கரூர் அருகே புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில், புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us