Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அம்மன் நகரில் குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

அம்மன் நகரில் குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

அம்மன் நகரில் குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

அம்மன் நகரில் குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

ADDED : மே 15, 2025 01:40 AM


Google News
கரூர் :கரூர் அருகே, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாநகராட்சி, 38வது வார்டு கொளந்தானுார் அம்மன் நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, அம்மன் நகர் வழியாக நோயாளிகளை அழைத்து செல்லும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், அம்மன் நகரில் சாலையின் பல இடங்களில், குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பல்வேறு விதமான வாகன ஓட்டிகள் அவதிப்

படுகின்றனர்.

எனவே, கொளந்தாகவுண்டனுார் அம்மன் நகரில் குண்டும், குழியுமான சாலையை, சீரமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us