Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை

ADDED : மார் 11, 2025 06:59 AM


Google News
கரூர்: திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரித்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாவட்ட மக்களின் நுழைவு வாயிலாக உள்ள கரூர் நகரை சுற்றி, திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. பொதுமக்கள் வசதிக்காக, கருப்பு நிற சின்டெக்ஸ் தொட்டிகள் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டன. நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆனால், நாளடைவில் தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டனர். இதனால் நெடுஞ்சாலைகளில் உள்ள, தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர், தண்ணீர் அருந்த முடியாத நிலை உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை சீரமைத்து, தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us