Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விரைந்து முடிக்க கோரிக்கை

விரைந்து முடிக்க கோரிக்கை

விரைந்து முடிக்க கோரிக்கை

விரைந்து முடிக்க கோரிக்கை

ADDED : செப் 03, 2025 02:24 AM


Google News
கரூர், :கிருஷ்ணராயபுரம் அருகே, சிந்தலவாடி பஞ்.,க்குட்பட்ட லாலாபேட்டையில் இருந்து, கள்ளப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், குறுக்கே புதிதாக பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இவ்வழியாக மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி செல்லும் பிரதான சாலை உள்ளது.

இதில் புதிதாக பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், இவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வழியே பள்ளிக்கூடங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள், மருத்துவமனை செல்லும் ஆம்புலன்ஸ்கள் சற்று சிரமப்பட்டு செல்கின்றன. எனவே, புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us