/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 12, 2025 02:11 AM
கரூர் : கரூர் மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம் நாளை (13ம் தேதி) காலை 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்-கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.