Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை

ADDED : ஜூன் 02, 2025 04:04 AM


Google News
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளப்பள்ளி, கருப்பத்துார், பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகிளிப்பட்டி, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இங்கு, பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ரக வாழைத்தார் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று, 350 ரூபாய், பூவன் வாழைத்தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us