ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
கரூர்: கரூர்-ஈரோடு சாலை கோதுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
அந்த பகுதிகளில், போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதுகுறித்து பலமுறை, புகார் தெரிவித்தும் கோதுார் பகுதியில், வடிகால் வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், அந்த பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கோதுார் பகுதியில் வடிகால் வசதிகளை செய்து தர, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.