/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நீர்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர் நீர்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர்
நீர்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர்
நீர்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர்
நீர்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர்
ADDED : செப் 16, 2025 01:34 AM
கரூர், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், நொய்யல் ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது.
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் பெய்யும் மழையால், உருவாகும் நொய்யல் ஆறு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஓடி, காவிரியாற்றில் கலக்கிறது. இந்நிலையில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்ல தொடங்கியுள்ளது.
மேலும், கரூர்-ஈரோடு சாலை நொய்யல் ஆற்றில் இருந்து பிரியும், வாய்க்காலிலும் நேற்று வினாடிக்கு, 60 கன அடி தண்ணீர் சென்றது. அதன் மூலம், 8,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இம்மாத இறுதியில், வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்யும் போது, நொய்யல் ஆறு மற்றும் வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.