Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளிர்ந்த காற்றுடன் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

குளிர்ந்த காற்றுடன் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

குளிர்ந்த காற்றுடன் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

குளிர்ந்த காற்றுடன் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ADDED : ஜூன் 03, 2024 06:58 AM


Google News
கரூர் : இடியுடன் கூடிய பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும், 6 வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், நேற்று இரவு வரை கரூர் நகர், திருகாம்புலியூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்திகிராமம், திருமாநிலையூர், புலியூர், வெண்ணைமலை உள்ளிட்ட பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்தது.பகலில், வெயிலின் தாக்கம் கரூர் மாவட்டத்தில் குறையவில்லை. நேற்று மாலை இடியுடன் கூடிய பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us