Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் வட்டாரத்தில் தொடரும் மழை

கரூர் வட்டாரத்தில் தொடரும் மழை

கரூர் வட்டாரத்தில் தொடரும் மழை

கரூர் வட்டாரத்தில் தொடரும் மழை

ADDED : அக் 06, 2025 04:23 AM


Google News
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை மழை பெய்தது.

அரபிக்கடல் பகுதியில் நிலவும், குறைந்தழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழைளவு விபரம் (மி.மி.,) குளித்தலை, 2.60, தோகைமலை, 46.80, பஞ்-சப்பட்டி, 3, கடவூர், 5 மி.மீ., மழை பெய்தது.

இந்நிலையில் நேற்று மாலை, 4:00 முதல், 4:30 மணி வரை கரூர் டவுன், திருமாநிலையூர், சுங்ககேட், செல்லாண்டி-பாளையம், சுக்காலியூர், காந்தி கிராமம், பசுபதி பாளையம், வெங்கமேடு, தான்தோன்றி மலை, திருகாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 9.01 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us